தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு சம்மர் ரிலீஸ் ஆக விஜய்யின் கில்லி படம் ரிலீஸ் ஆகி 50 கோடி வசூல் என்கிற அந்தஸ்தை கில்லி படம் அடைந்தது. அதனை தொடர்ந்து, 2024 -ல் முதல் முறையாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்றது இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு விஜய்யின் கில்லி திரைப்படம் ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் புரட்சியையே, நடத்தியது. தமிழ் சினிமாவிலேயே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, அதிக வசூல் பெற்ற படம் என்ற பட்டியலில் முதலிடத்தை கில்லி பிடித்தது.

அதனை தொடர்ந்து, ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினிகாந்தின் படையப்பா படம் கூட கில்லியின் ரீ ரிலீஸ் வசூலை முந்தவில்லை. 2024 முதன் முதலாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் 30 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இந்நிலையில், கடந்த வாரம் கில்லி திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. நாலு நாட்களில் 2.25 கோடி ரூபாய் வசூலை கில்லி அள்ளியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே சமயத்தில், கில்லி படம் குறித்து பலரும் பேசி வரும் நிலையில், விஜய்க்கு இணையான வில்லன் ரோலில் முத்துப்பாண்டி கதாபாத்திரமும் பேசப்படும் ஒன்று. அந்த அளவிற்கு, சிறப்பாக இருந்திருக்கும்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வில்லன் நடிகர், கில்லி படத்தின் முத்துப்பாண்டி ரோலில் நான்தான் நடித்திருக்க வேண்டும் என வில்லன் நடிகர் வின்செட் அசோகன் தெரிவித்திருக்கிறார். அந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அதன் பிறகு இயக்குனர் தரணி தன்னை வேறுபல படங்களுக்கு ரெகமென்ட் செய்து வில்லனாக நடிக்க வைத்தார் எனவும் வின்சென்ட் அசோகன் தெரிவித்துள்ளார்.

