சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 250 காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை மாநகர ஆணையர் உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க போலீசாரின் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், உத்தரவின் பேரில் காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அதன்பேரில், சென்னை மாநகர வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் 4 மண்டலங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் 7 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள், 2 அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் 211 காவலர்கள் உள்ளிட்ட 250 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் இருந்து குறைதீர் மனுக்களை பெற்றார்.

இதைத்தொடர்ந்து இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உட்பட்ட பகுதிகளில் உள்ள போலீசர்கள் பணிமாறுதல், தண்டனை முடிந்தவர்கள், காவலர் குடியிருப்பு குறை கோருதல், ஊதியம் குறைபாடுகள் உள்ளிட்ட மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, இணை ஆணையாளர், காவல் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

