வெள்ளி திரையில் எப்படி நடிகர், நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்களோ அப்படித்தான் சின்னத்திரையிலும் நடிகர், நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள்.
அப்படி சீரியலில் மாமியாராக கலக்கி வருபவர் நடிகை மீரா கிருஷ்ணன். இவர், ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் கூறிய விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
முன்னதாக, மீரா கிருஷ்ணன் ஒரு சீரியல் நடிகை மட்டுமல்ல, ஒரு செய்தி வாசிப்பாளர் என்பது பலரும் அறிந்திடாத விஷயமே. இவர் சன் டிவியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

இதன் பின்னர், சன் டிவியில் நாயகி மற்றும் சித்தி 2 சீரியல்களில் நடித்திருந்தார். அதேபோல், ஜீ தமிழில் கார்த்திகை தீபம், சீரியலிலும் நடித்திருக்கிறார். இவர் நடித்துள்ள சீரியலில் எல்லாம் இவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்க தகுந்ததாக இருக்கும்.
இதனாலேயே இவர், பல ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இந்த நிலையில், இவர் நாயகி சீரியலில் இயக்குனர் பற்றியும் அவர் அந்த சீரியலில் நடித்த கதாபாத்திரத்தை பற்றியும் பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் கூறிய விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. தனக்கு நாயகி சீரியலில் மகனாக நடித்த சின்னத்திரை நடிகர் திலீப்புக்கும் ஒரே வயது தான் என்றும், திலீப்பும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் நேரடியாகவே இயக்குனரிடம் போய் அவருக்கும் எனக்கும் ஒரே வயசு தான் நான் எப்படி அவங்களோட மகனா நடிக்க முடியும் சார் என கேட்டார்.

இதன் பின்னர், திலீப்பும் தனிப்பட்ட வாழ்க்கை வேறு சினிமா வாழ்க்கை வேறு என புரிந்து கொண்டு சீரியலில் சிறப்பான கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்துக் கொடுத்தோம். ஆனால், அப்போதே என்னை பலரும் நான் 50 வயதுக்கு மேல் இருப்பேன் என்று கூறினார்கள்.
ஆனால், எனக்கு அப்போது வயது 30 தான். அதேபோலத்தான் இப்போது எனக்கு 50 க்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், எனக்கு இன்னும் 40 கூட ஆகவில்லை. மற்றவர்கள் என் தோற்றத்தை வைத்து வயதை எடை போடுவது எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். இது தான் என் கதாபாத்திரத்திற்கான அங்கீகாரம் என நினைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர் பேசிய வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

