பொள்ளாச்சியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழை-2ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. ஒரு மணிநேரத்திற்கு மேல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டது.
இதனிடையே, பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம், சி.கருமாண்டகவுண்டனூர், சி.கோபாலபுரம் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யபட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தது.
அறுவடை செய்ய தயாராக இருந்த வாழை கொழைகளும் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்க் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

