பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி. மும்பையில் வசித்து வந்த நிலையில், நாத்தனார் மகன் ரோகித் மர்வாவின் திருமணம் துபாயில் நடந்த சமயத்தில், அதற்காக குடும்பத்துடன் இளையமகள் குஷியுடன் துபாய்க்கு சென்றார்.

அப்பொழுது, மூத்த மகள் ஜான்விகபூர் தன் முதல் படமான தடக் சூட்டிங் இருந்ததால் துபாய்க்கு வரவில்லை. இந்நிலையில், ஹோட்டல் அறையில் இருந்த குளியல் தொட்டி நீரில் மூழ்கி இறந்துவிட்டார் ஸ்ரீதேவி என்று செய்திகள் வெளியாகவே சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த செய்தி வெறும் வதந்தி என்று நினைத்தார்கள்.

ஆனால், அது வதந்தி இல்லை 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார். அவரின் உடலை மும்பைக்கு கொண்டு வந்து மகாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தியது.

எல்லாம் நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது. ஆனால், ஸ்ரீதேவி இறந்து அதற்குள் 8 ஆண்டுகள் ஓடி விட்டது. நீங்கள் உயிருடன் இல்லை என்பதை இன்னும் நம்ப கடினமாக இருக்கிறது என்று ஸ்ரீதேவி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், ஸ்ரீதேவி இறந்துவிட்டாலும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அவ்வப்போது சென்று மிஸ் யூ திரும்பி வர முடியாதா என்று கமெண்ட் செய்தும் வருகிறார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்த ஸ்ரீதேவி தன் 53 வது வயதில் இறந்தது பற்றி பலரும் சமூக வலைதளங்களில் சோகமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
Remembering Sridevi ji on her death anniversary 🙏 #Sridevi pic.twitter.com/RcI99WCGEk
— Jackie Shroff (@bindasbhidu) February 24, 2026

