TVK தலைவர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால், சென்சார் சிக்கலால் நீதிமன்றத்திற்கு சென்றார் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்.
நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்காமல் போனதை அடுத்து, அந்த வழக்கை வாபஸ் பெற்றார்கள். முன்னதாக சென்சார் போர்டு மீது சமீப காலமாக பல்வேறு புகார்கள் எழுத்து வருகிறது.

குறிப்பாக, விஜயின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியது. அந்த படத்தின், ரிலீஸ் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
ஜனநாயகன் படத்திற்கு நடிகர் சங்கமோ தயாரிப்பாளர் சங்கமும் எதுவும் ஆதரவு அளிக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டதற்கு நடிகர் விஷால் சென்சார் போர்ட் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார்.
அதில், எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். கோர்ட்டு இருக்கும்போது நாங்கள் எப்படி தலையிட முடியும். KVN நிறுவனம் பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தால் ஏதாவது செய்திருக்கலாம் என விஷால் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயை உங்களுக்கு நன்றாக தெரியும். அவருக்காக பேசியிருக்கலாமே என செய்தியாளர்கள் கேட்ட நிலையில், சென்சார் போர்டில் ஐந்து பேர் அமர்ந்து கொண்டு எட்டு கோடி மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்ன பார்க்க கூடாது என முடிவு செய்கிறார்கள். அதில், எனக்கு பெரிதும் உடன்பாடு இல்லை. ஆனால், அதுதான் விதியாக இருந்து வருகிறது என்று விஷால் காட்டமாக அதில் பேசியுள்ளார்.

