நடிகர் விஜயை பிரபல நடிகையான திரிஷாவுடன் தொடர்பு படுத்தி விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திரைத்துறையில் இருந்தும் அரசியல் தளத்திலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தது.
அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட திரிஷாவும் நடிகர் விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் தன்னை விஜய்யுடன் தொடர்பு படுத்தி பேசிய அரசியல்வாதியான நயினார் நாகேந்திரன் பெயரை குறிப்பிடாமல் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இப்படி இருக்கையில், நடிகர் விஜய் வேலூரில் பேசிய போது, தன்னைப் பற்றிய அவதூறு கருத்துகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், என் மேல் என்னென்ன அவதூறுகள் பரப்புகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அது மக்கள் மீது அவதூறு பரப்புவதற்கு போன்றது.
எனக்கு அரசியல் தெரியவில்லை என்று சொன்னால், அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வதை போன்றது. என்னை அசிங்கமாக பேசினால் அது மக்களை அசிங்கமாக பேசுவதை போன்றது.

எனக்கு எதிராக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்யப்படும் செயல் என்று அவர்களுக்கே தெரியாமல் போய்விட்டது என்று பேசி இருந்தார். மேலும், இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை இந்த விஜயையும் மக்களும் ரத்தமும் சதையும் போல உடலும் உயிரும் போல ஒன்றிணைந்து ஒன்றாகப் பிரிக்கவே முடியாது.

சென்சிட்டிவான சென்டிமென்ட் அது என்று கத்தி பேசினார். விஜய் இவ்வாறு பேசியதும் மேடையிலேயே சில வினாடிகள் அமைதியாக நடந்தார். அதேபோல், மிகவும் எமோஷனல் ஆகி கண் கலங்கினார். விஜய் இவ்வளவு ஆவேசமாக பேசி எமோஷனல் ஆவது அவரது கட்சி மேடையில் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

