கொங்கு மண்டலத்தில் வருகிற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெரும் சிவசேனாதிபதி பேட்டியளித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் வருகிற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெரும் என, வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறினார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” 2026 சட்டமன்ற தேர்தல் பொதுக்கூட்டம் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் நேற்று இரவு நடந்தது. இதில், சுற்றுச்சூழல் அணி செயலாளர், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வடக்கு மாவட்ட பொறுப்பாளர், மேயர் தினேஷ்குமார், வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ், வடக்கு சட்டமன்ற பொறுப்பாளர் குமணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, ஒன்றிய பா.ஜனதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் காதில் பூ வைத்தனர்.
மேலும், தமிழகத்திற்கு பட்ஜெட்டில் ஒன்றும் வழங்காததை கண்டித்து கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு முட்டை போண்டா வழங்கப்பட்டது. இது அந்த பகுதியில் சுட சுட தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் அணி செயலாளர், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்து கொண்டு பல்வேறு அமைப்பினரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, நிருபர்களுக்கு கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் உத்தரவின் படி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ள கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படுகிறது.
பொதுமக்களின் விருப்பங்கள் குறித்தும் கேட்டறியப்படுகிறது. திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலைஞர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். இந்தக் கூட்டணியை பொறுத்துக் கொள்ளாத சிலர் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
இந்த முறை தேர்தல் முடிவுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் சிறப்பான ஆட்சி செய்துள்ளார். இந்த ஆட்சி குறித்து கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் அறிவார்கள். மீண்டும் திமுக ஆட்சி அமைய வாக்களிப்பார்கள்.
கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றி திமுக சட்டமன்றத் தேர்தலில் பெரும்,
மாணிக்கம் தாகூர் எம்பி பேசி வரும் கருத்துக்கள் வருத்தமளிக்கிறது. ராகுல் காந்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நல்ல நட்புறவில் உள்ளனர். தேர்தல் அறிக்கை சிறப்பாக வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

