உங்க வீட்ல அடிக்கடி சப்பாத்தி செய்கிறார்கள் என்றால், அதற்கு இந்த பன்னீரை ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்ல இருக்கிறவங்க கூட அடிக்கடி இதை செய்ய சொல்லி கேட்பாங்க, சொல்லப்போனால் இந்த பன்னீர் பட்டர் மசாலாவை 15 நிமிஷத்துல செஞ்சிடலாம். இதை காலையில ஸ்கூலுக்கு ஆபீஸ்க்கு கூட கொடுத்துவிடலாம். எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு,
- 2 தக்காளி
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 5 முந்திரி
- 1/4 டீஸ்பூன் மஞ்சத்தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
தாளிப்பதற்கு,
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 1 பெரிய வெங்காயம்
- தண்ணீர் தேவையான அளவு
- உப்பு சுவைக்கேற்ப
- 200 கிராம் பன்னீர்
- கஸ்தூரி மேத்தி சிறிது

செய்முறை
Step 1: முதலில் மிக்ஸி ஜாரில் தக்காளி, முந்திரி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு நைசாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Step 2: இதனை அடுத்து, வானொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணை சேர்த்து உருகியதும்.
Step 3: பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
Step 4: பின்னர், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறி ஒரு கப் நீர் ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
Step 5: இவற்றை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க வேண்டும்.
Step 6: மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்ததும் மூடியை திறந்து பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும்.
Step 7: இறுதியாக அதில், கஸ்தூரி மேத்தியை தூவி இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.

