கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகாவும், ஐதராபாத்தை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர்.
இவர்களது காதல் பற்றி ஊடகங்களில் வெளியான போதும் கூட, இருவரும் எந்த மறுப்போ, அறிவிப்போ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் என்ற தகவல் காட்டுத்தீப் கடந்த சில மாதங்களாக பரவியது.
இது குறித்தும் இருவரும் எந்த அறிவப்பும் வெளியிடவில்லை, இந்த நிலையில் பிப்ரவரி மாதம் திருமணம் என்றும், அழைப்பிதழ் ஒன்றும் சோஷியல் மீடியாவில் பரவி வைரலானது.
அதில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டிருந்தது. அதில், எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம், எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம் என விஜய் தேவரகொண்டா கூறியிருக்கிறார்.
மேலும் இந்த அழைப்பிதழ் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து மார்ச் 4ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் திருமண கொண்டாட்டத்திற்காக இருதரப்பினரும் தயாராகியுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவர கொண்டா வீடு மின் விளக்குகளால் ஜொலிக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

