தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவு நாளில் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான ஐயப்பன், மாணவர்களின் பசியை போக்கும் உன்னதமான திட்டம் இது என்றும், மாணவர்களுக்கு தாயாக இருந்து உணவளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சர் ரூ.5000 வரவு வைத்தது பற்றி எதுவும் பேசாமல் சட்டமன்றத்துக்கு இன்று வராமல் சென்றுவிட்டனர் என அதிமுக எம்எல்ஏக்களை கூறிய அவர், எம்ஜிஆர் எப்படி சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தாரோ, அதே போல காலை உணவுத் திட்டம் சமூகமே கொண்டாடி வருகிறது என கூறினார்.

மேலும் வரும் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என கூறிய அவர், ஓபிஎஸ்க்கு நன்றி கூறிவிட்டு உரையை முடித்தார்.
எம்எல்ஏ ஐயப்பன் அப்படி பேசியதும் பேரவை முழுவதும் கரகோஷம் எழுந்தன. ஆனால் முதல்வரோ, எம்எல்ஏ பேச்சை கேட்டு சிரித்தார். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ இப்படி பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

