மதுரை மீனாட்சி முதல் மாடர்ன் மங்கைகள் வரை கண் முன்னிறுத்தியே மாணவிகள் கோவையில் அசத்திய ஃபேஷன் ஷோ நடைப்பெற்றது.
கோவை கல்லூரி ஒன்றில் கல்லூரி மாணவிகள் பேஷன் ஷோவில் தெய்வங்கள் சேலைகள் உடுத்தி வந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக ஆடை வடிவமைப்பில் செய்து அணிவகுத்த மாணவிகளின் ராம் வாக் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கோவை மாவட்டம் சூலூர் அரசூர் அருகே உள்ள தனியார் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை சார்பில், மாநில அளவிலான ‘எலெகன்சா’26’ எனும் பிரம்மாண்ட ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

30 கல்லூரிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தனித்துவமான ஆடை வடிவமைப்புத் திறனை வெளிப்படுத்தினர்.இந்த பேஷன் ஷோவில், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி மற்றும் துர்க்கை, லட்சுமி, வாணி ஆகிய தெய்வங்களின் திருவுருவங்களை கண் முன்னே தத்ரூபமாக ஆடை வடிவமைத்து சேலையில் ஜொலித்த கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இக்கால மற்றும் அக்கால ஆடை அலங்காரங்களுடன் மாணவ, மாணவிகள் மேடையில் ஒயிலாக நடைபோட்ட இந்த நிகழ்விற்கு, கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் அருண் பாலகிருஷ்ணா, வர்ஷா சி.கே மற்றும் கெளஷிகா குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து பரிசுகளை வழங்கினர்.

சிகையலங்காரம், முகவோவியம், நக அலங்காரம், மெஹந்தி மற்றும் மறுசுழற்சிப் பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள் எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு மிஸ்டர் அண்ட் மிஸ் எலெகன்சா’26 உள்ளிட்ட விருதுகளுடன் 50,000 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநயத்தையும் நிபுணத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த ஆடை அணிவகுப்பு விழா வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

