காபித்தூளை குடிக்க மட்டும் இல்லைங்க காபித்தூளை கொண்டு இயற்கையான முறையில் நம்ம முகத்தையும் அழகாக வைத்துக் கொள்ள முடியும். அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
- காபித்தூள் ஒரு டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன்
- சர்க்கரை ஒரு கப்
மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமில்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர், மிதமான நீரில் குளிக்கவும்.

- ஒரு கப் காபி பொடி
- இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
கலந்து முகத்தில் பத்து நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்வதால் ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பிரகாசமாகும்.
அதேபோல், கற்றாழை 5 ஸ்பூன் எடுத்து மசித்து கொள்ளவும். அதோடு, காபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு ஸ்கிரப் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

நாலு டீஸ்பூன் காபித்தூளில், ஒரு கப் பால் மற்றும் 2 டீஸ்பூன் தேன் கலந்து முகம் கை கால் கழுத்து போன்ற இடங்களில் தடவி பத்திலிருந்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
நாலு டீஸ்பூன் காபித்தூள் நாலு டீஸ்பூன் பட்டர் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கி முகத்தில் மட்டுமல்லாது கை, கால் கழுத்து போன்ற இடங்களிலும் தேய்த்து பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளிச்சென்று ஆகிவிடும்.

மேற்கூறிய முறைகளில் உங்களுக்கு எந்த முறை ஏற்றதாக உள்தோ அதனை பயன்படுத்தி நீங்கள் பயன்பெறலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

