ஹைதராபாத் பிரியாணி உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனை மூலம் இந்தியா முழுவதும் ரூ.70,000 கோடி ரூபாய் வரியை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரியாணி உணவுகளில் அதிகாரிகள் வழக்கமான சோதனை நடத்தினார்கள்.
அப்போது, பல லட்சக்கணக்கான பில்லிங்களில் உண்மை தன்மை ஆய்வு செய்ய AI வசதியை பயன்படுத்தினர். அப்போது, பல உணவுகள் உண்மையான வரியை மறைக்க பில்லிங் மென்பொருளை தவறாக கையாண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அழிக்கப்பட்ட பில்களை AI கண்டுபிடித்து கொடுத்தது. முன்னதாக, பல உணவுகள் அதிக வருவாய் பெற்றதும். ஆனால், அவர்கள் மிகக் குறைவாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தன.
இந்த ஆய்வில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான உணவகங்கள் தொடர்புடையதாகவும், பணப் பரிவர்த்தனைகள், ரசீதுகள் நீக்கப்பட்டு வரி மற்றும் ஜிஎஸ்டி தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய உணவகங்களில் இந்த சோதனைகளை நடத்தினர். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய பிறகு பல பில்கள் நீக்கப்பட்டதாகவும், அமைப்புக்குள் மாற்றப்பட்டதையும், அவர்கள் கண்டறிந்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது .
கர்நாடகாவில், அதிகபட்சமாக ரூ.2000 கோடியும், தெலுங்கானாவில் ரூ.1500 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.1200 கோடியும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் சுமார் 27 சதவீதம் மறைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. முன்னதாக, விற்பனையை மறைப்பதற்கு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

