கோடைகால சிறப்பு தொகை ரூ.2000 இனி ஆண்டு தோறும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
இதற்க்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடியா திமுக அரசு தோல்வி பயத்தில் நாளொரு அறிவிப்பினை வெளியிட்டு ஓட்டுக்காக மக்களைக் கவர முயற்சி செய்வது அப்பட்டமாகத் தெரிகிறது.
இன்று சட்டசபையில் இனி வருடந்தோறும் கோடைகால சிறப்பு தொகையாக ரூ. 2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பானது மக்கள் விரோத திமுக அரசின் உச்சகட்ட தோல்வி பயத்தினை வெளிக்காட்டியுள்ளது.
கடந்த 5 வருடங்களாக ஆட்சியில் இருந்து விட்டு கடைசி 5 மாதத்தில் மட்டும் முதல்வருக்கு ஞானோதயம் பிறந்து விட்டதா? அல்லது இந்த மக்களை ஏமாற்றி விட்டோமே என்று மனசாட்சி உறுத்தி விட்டதா? அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பொங்கல் சிறப்பு பரிசு 3000, மாணவர்களுக்கு இலவச லேப்டாப், அரசு சார்பில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மாநாடுகள், மகளிர் உரிமைத் தொகை மொத்தமாக வரவு வைப்பு என அடுத்தடுத்து திட்டங்களை நிறைவேற்றுவது ஏன்?

தோல்வி பயம் உங்களைத் தொற்றிக் கொண்டதன் விளைவாக நீங்கள் என்ன திட்டங்களைக் கொண்டுவந்தாலும் தமிழக மக்கள் உங்கள் ஆட்சிக்கு முடிவுரை எழுதி வீட்டிற்கு அனுப்புவதற்கு தேர்தலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள் முதல்வர் அவர்களே. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

