சத்குரு பற்றி இளையராஜா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிகரம் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 1500 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக தற்போது வரை திகழ்ந்து வருகிறார்.
முன்னதாக, அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா முதல் படத்திலேயே, தமிழ்நாட்டில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். அவர், இசையமைத்த பிறகு தான் நமக்கான இசையும் திரைப்படங்களில் வரும் என்று கடைகோடி ரசிகர்களும் உணர தொடங்கியது அந்த காலம்.

ஒவ்வொரு படத்திலும், புதுப்புது இசையை கொடுத்து அனைவரையும் கவர்ந்தவர். அறிமுகமான சில வருடங்களில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்து விட்டார். ஒரே நாளில் மூன்று, நான்கு படங்களுக்கு எல்லாம் அவர் இசையமைத்த சம்பவங்களும் உண்டு.
அது மாதிரி தற்போது வரை வேறு யாரும் செய்ததில்லை. குறிப்பாக, ஒரு படத்தில் இருந்த இசை இன்னொரு படத்தில் இருக்காது என்பதுதான் இளையராஜாவின் சிறப்பு. இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

இளையராஜா தீவிரமான ஆன்மீகவாதி என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அவரது, ஸ்டுடியோவில் ரமண மகரிஷி புகைப்படம் எல்லாம் இருக்கும். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி என்றுதான் இளையராஜாவை அழைப்பார்.
சினிமாவுக்கு இசையமைப்பது மட்டுமின்றி ஆன்மீகம் தொடர்பாகவும் ஏகப்பட்ட பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், சத்குரு குறித்து இளையராஜா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதில், எல்லோருக்கும் பேதம் இல்லாத அன்பை காட்டுபவன் தான் சத்குரு. சத்குருனு சொல்லிக் கொள்பவன் எல்லாம் சத்குரு கிடையாது. சத்தியமா ஆகவும் முடியாது என்று அவர் பேசியதும் அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்து போனது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவை இளையராஜா பேசி உள்ளாரா என்று சந்தேகித்து வருகின்றனர்.
இளையராஜா பேசிய வீடியோ:

