தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துவரும் நடிகை ரெஜினா பாலிவுட் திரையுலகில் தனக்கு பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக, சோனம் கபூர் நடிப்பில் வெளியான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அடேங்கப்பா எடுத்த எடுப்பில் ரெஜினாவுக்கு பாலிவுட்டில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று பலரும் ஆச்சரியப்பட்டு பேசினார்.

ஆனால், பிரபல பத்திரிக்கைக்கு ரெஜினா அளித்த பேட்டியில் நான் ஒரு தென்னிந்திய பெண் என்பதால் ஹிந்தி சினிமாவில் தன்னை மோசமாக நடத்தினார்கள். பெரும்பாலான தென்னிந்திய நடிகைகளுடன் ஒப்பிடும் போது நான் நன்றாக இந்தி பேசுவேன். எனக்கு, ஹிந்தியில் எழுத படிக்க பேச தெரியும். இதனால், வரை நான் நடித்த படங்களுக்கு நானே தான் ஹிந்தியில் டப்பிங் பேசியிருக்கிறேன்.

ஒரு கதாபாத்திரத்தில், நடித்தால் முழு ஈடுபாடுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். ஆனால், பாலிவுட்டில் பலர் என்னை மோசமாக நடத்தி இருக்கிறார்கள். நடவடிக்கைகளாலும், என்னை பாலிவுட்டில் மோசமாக நடத்தினார்கள். என்னை வேண்டும் என்றே தரக்குறைவாக நடத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் உங்களை மட்டமாக பார்த்தால், இனியும் இந்தி படங்களில் நடிக்காதீர்கள். மதிப்பில்லாத இடத்தில் இருக்க கூடாது என்று ரெஜினாவின் ரசிகர்களும் ரெஜினாவுக்கு அட்வைஸ் வழங்கி வருகின்றனர்.

ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் இதுவரை மூன்று இந்தி படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. தற்போது, அவர் ஒரு இந்தி படத்தில் நடித்து முடித்து அதன் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

