2014 ஆம் ஆண்டு ரஜினியின் இரண்டாம் மகளான சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார்.
பல்வேறு விமர்சனங்கள் இந்த படம் வெளியான போதே இருந்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். மேலும், இந்த படத்தை பொம்மை படம் எனவும் விமர்சித்தார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் லேட்டஸ்ட் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றப்பட்ட கோச்சடையான் வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், 48 வினாடிகள் ஓடும் இந்த டீசரில் ரஜினிகாந்த் தனது பழைய இரட்டை வேடங்களில் மீண்டும் தோன்றி போர்க்களத்தில் எதிரிகளை தாக்கும் காட்சிகள் மேம்படுத்தப்பட்ட விஷுவல் தத்ரூபமான படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

தீபிகா படுகோனும் இதில், ஒரு சிறிய காட்சியில் தோன்றுகின்றார். இந்த டீசருக்கும் நெட்டிசன்கள் எதிர்மறையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். தொழில்நுட்பம் வளரும் வரை இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்கலாம். இது ஒரிஜினலை விட மோசமாக தெரிகிறது என்றும், கொஞ்சம் சும்மா இருமா என்றும், மேம்பட்ட AI தொழில்நுட்பம் மூலம் இப்போது இருந்ததை விட சிறந்த பதிப்புகளை உருவாக்க முடியும்.

இது ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது என்றும் கூறி வருகின்றனர். அதேபோல், இது சராசரிக்கும் குறைவாக உள்ளது. தயாரிப்பு நிறுவனம் முறையான நோக்கத்துடன் அதிக முதலீடு செய்ய வேண்டும் அல்லது தொழில்நுட்பம் இன்னும் மேம்படும் வரை சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த கதைக்கு இன்னும் சிறப்பான தரம் தேவைப்படுகிறது என்றும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
Kochadaiyan was truly ahead of its time – a bold first of its kind, the directorial debut of @soundaryaarajni, supported by EROS and India’s first photorealistic film created with mega stars.
— Eros Universe (@ErosUniverse_) February 17, 2026
Today, powered by ErosGenAI’s advanced models – from AI-led restoration and performance… pic.twitter.com/SaXdXayMGQ

