தனது மகளுக்கு சான்ஸ் கேட்டு இளம் இசையமைப்பாளரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் பிரபல நடிகை.
சினிமாவில் கிளாமரே காமிக்காமல் வெற்றி பெற்ற நடிகைகளில் தேவயானிக்கு பெரிய இடம் உண்டு. தமிழ் மட்டுமல்லாமல், மற்ற மொழிகளிலும், கிளாமர் காட்டமாமல் நடித்து புகழ் பெற்றார்.
ஒரு கட்டத்தில் அதிக மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வந்த போது, நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்த போது இயக்குநர் ராஜகுமாரனடன் காதல் வயப்பட்டார்.
திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்த போதும் கூட, வீட்டை விட்டு வெளியேறி இயக்குநரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில் இரண்டாவது மகள் இனியா, தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பாடல்களை பாடி மக்கள் மனங்களை வென்றார்.
அவர் அந்த போட்டியில் பட்டம் வாங்காவிட்டாலும், கங்கை அமரன், வித்யாசாகர் , தேவா போன்ற இசை ஜாம்பவான்களிடம் இருந்து பாராட்டை பெற்றார்.
இந்த நிலையில் நடிகை தேவயானி ஒரு நிகழ்ச்சியில், சாய் அபயங்கரிடம் தன் மகளுக்காக வாய்ப்பை கேட்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய தேவயானி, சாய் அபயங்கரின் அப்பா, அம்மாவின் ரசிகர்கள்க நாங்க இருந்தோம். இப்போது அவருடைய ரசிகர்களாக இருக்கோம். நீங்க மென் மேலம் வளர வேண்டும் என வாழ்த்தினார்.

மேலும் தனது மகள் இனியா நன்றாக பாடுவார். அவர் உங்களின் தீவிர ரசிகை, இனியாவுக்கு உங்கள் இசையில் பாட வேண்டும் என ரொம்ப ஆசை, வாய்ப்பு இருந்தால் அழைத்து கொடுங்கள் என ஓபனாக பேசினார்.
இதைக் கேட்ட சாய் அபயங்கர் கண்டிப்பா வாய்ப்பு தரேன் என கூறினார். மேடையில் மகளுக்காக பாப்புலரான நடிகை தேவயானி ஓபனாக வாய்ப்பு கேட்டது அவரது ரசகிர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

