1.600-கிலோ கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கு தொடர்பாக, 24 வயது இளைஞருக்கு 4 ஆண்டு சிறை தண்டணை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2021 கோவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கழிப்பிடம் அருகே சுமார் 20-25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.
அங்கு உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே வெள்ளை நிற பையுடன் வந்த நபரை காவலாளி அடையாளம் காட்ட மேற்படி நபரை காவல்துறையினர் பிடித்து தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அப்பொழுது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பது தெரிய வந்தது. மேலும், தற்பொழுது திருப்பூரில் குடியிருந்து வருவதாகவும் கூறி உள்ளார். அவரிடம் நடத்திய சோதனையில் அவர் கையில் வைத்து இருந்த வெள்ளை நிற பையில் கஞ்சா இருந்தது.

அதை எடை போட்டு பார்க்க ஒரு 1.600 கிலோ கிராம் எடை இருந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சரவணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போதை பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.

