தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. எந்தவித பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து முன்னணி காமெடி நடிகராக மாறியவர். முன்னதாக, பல காமெடி நடிகர்கள் சக நடிகர்களை கிண்டல் செய்த சூழலில் இவர் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்த தான் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது என்பது நிதர்சனமான உண்மை.

இப்படி இருக்கையில், உச்சத்தில் இருந்த வடிவேலு அரசியல் மேடையில் அவரது பேச்சுக்கள் அவரது வளர்ச்சியை பாதாளத்திற்கு கொண்டு போய் சேர்த்துவிட்டது. அதாவது விஜயகாந்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அவர் பேசிய அநாகரிகமான பேச்சுக்கள் எல்லாம் அவருக்கே ஆப்பாக அமைந்தன.

இதனால், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பலரும் வடிவேலுவின் கதை அவ்வளவுதான் என சொல்லி வந்தனர். ஆனால், ரீ என்ட்ரி ஆக மீண்டும் நடிக்க ஆரம்பித்த வடிவேல் நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2, மாரிசன், கேங்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இவற்றில் மாமன்னனும், மாரிசனும் சூப்பர் ரெஸ்பான்ஸ் அவருக்கு கொடுத்தது. அடுத்ததாக, பிரபுதேவா உடன் ஒரு படத்தில் தற்போது நடிக்கிறார். கார்த்திக் உடன் மார்ஷல் படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வடிவேலு செய்த ஒரு சம்பவம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகின்றன. அதாவது, ஒரு படத்தில் மணிவண்ணனுடன் சேர்ந்து வடிவேலு நடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடன் துணை நடிகரும் நடித்துக் கொண்டே இருந்தன. அந்த ஷூட்டிங் பெட்ரோல் பங்கில் நடந்து கொண்டிருந்ததாம்.

அப்போது, அங்கே இருந்த இளைஞர்கள் சிலர் அந்த நடிகைகளிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனே அவர்கள் தயாரிப்பாளரிடம் வந்து முறையிட படத்தின் தயாரிப்பாளர் அந்த இளைஞர்களை தாக்கி விட்டார். தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் அங்கிருந்து சென்று சிறிது நேரம் கழித்து ஒரு ரவுடி கும்பலோடு வந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்களாம்.

அப்போது, கொதிப்படைந்த வடிவேலு உள்ளே புகுந்து அந்த கும்பலை பயங்கரமாக தாக்கி விட்டாராம். இதை பார்த்து மணிவண்ணன் " ஐயோ வடிவேலு நீ ஏன் போற நீ ஒரு செலிபிரிட்டி.. எல்லாரும் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள்… நீ அடிக்கக்கூடாது" என சொல்லி தடுத்து பார்த்தாராம். கோபம் குறையாத வடிவேலு தொடர்ந்து அந்த ரவுடி கும்பலை அடித்து விட்டு தான் அங்கிருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. காமெடி செய்து சிரிக்க வைக்கும் வடிவேலு அடிப்படையில் பயங்கர கோபக்காரராக இருந்திருக்கிறார்.

