2012 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமான மெரினா படத்தில் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் இப்போது, சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருக்க காரணமானவர்கள் பலர் இருந்தாலும் தனுஷ் முக்கியமானவர்.
3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய ரோலை கொடுத்திருந்தார். அதேபோல், தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து அழகு பார்த்தார். சமீபத்தில், இரண்டு பேருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டன.

‘கொட்டுக்காளி’ படத்தின் விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய போது ‘நான் யாரையும் என்னால் தான் வளர்ந்தார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்’ எனக் கூறியிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் நன்றி மறந்த சிவா தனுஷை தான் இவர் மறைமுகமாக தாக்கி பேசுகிறார் என்றெல்லாம் கமெண்ட் செய்து வந்தனர்.

அப்படிப்பட்ட நிலையில், தான் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் நடந்தது. அதில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் கலந்து கொண்டார்கள். அப்போது, அவர்கள் சேர்ந்து நடனமும் ஆட செய்தார்கள். அதை பார்த்த பிறகுதான் இரண்டு பேருக்கும் நட்புதான் இருக்கிறது. எந்தவித பிரச்சனையும் இல்லை இது யாரோ ஒருவர் கிளப்பிவிட்ட தகவல் என்ற கருத்து நிலவியது.

இந்நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதிலும், சிவகார்த்திகேயனும் தனுசும் விருது பெற்றார்கள். அப்போது, தனுஷ் விருது வாங்கும் போது, சிவா மகிழ்ச்சியோடு கைகள் தட்டி மேலும், தனுஷ் வந்தபோது மரியாதையுடன் எழுந்து நின்ற அவர் அன்போடு கட்டி அணைத்துக் கொண்டார்.

இதை பார்த்த பலரும் அவர்களுக்குள் பிரச்சனை எல்லாம் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி என கமெண்ட் செய்து வருகிறார்கள். முன்னதாக, தனுஷுக்கு ஈடாக சிவா சம்பளம் பெற்று வருகிறார். இன்னும் சில படங்களில் தனுஷை விடவும் அதிகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கருத்துக்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

