தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர், பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய நடிகை மம்தா இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து ரசிகர்களுக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக இருந்துள்ளார்.

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை பேசியுள்ளார். அதில், எனக்கு காதல் செய்வது டேட்டிங் செய்வது போன்ற விஷயங்கள் அதிக அனுபவம் இல்லை என்றாலும், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் ஒரு பெண்ணாக எனது சொந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்பினேன்.

அப்போது, ஒரு பிரபலமான மலையாள நடிகர் என்னை டேட்டிங் செல்ல அழைத்தார். அதற்காக நான் என் அம்மாவிடம் அனுமதி பெற்று அவருடன் டேட்டிங் செய்து வந்தேன். அதன் பின் தான் தெரிந்தது அவருக்கு வேறொரு பெண்ணிடம் ஏற்கனவே நிச்சயம் ஆகி இருந்தது என்பதை நான் கண்டுபிடித்தேன். அதை என்னிடம் அவர் மறைந்திருந்தார். உண்மையாகவே அதிர்ச்சிகரமான விஷயமாக எனக்கு அமைந்தது.

பின் நான் வேறொருவரை சந்தித்தேன். ஆனால், அவர் என் நேரத்தை வீணடித்தார். இந்த காதலும், டேட்டிங்கும் தேவையற்றது. போங்கடா நீங்களும் உங்க லவ்வும் என்று உணர்ந்து கொண்டேன். மேலும், என் சகோதரியின் திருமணத்தில் நான் முதல் முறையாக பிரஜித்தை சந்தித்தேன்.

எங்கள் இருவருக்குமான பிடித்த விஷயங்கள் பொதுவாக இருந்ததால், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். எங்கள் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்தை வாழ்நாள் முழுக்கமான உறவாக நினைத்தேன். ஆனால், ஆறு மாதத்தில் நாங்கள் பிரிந்தது மிகவும் கடினமான முடிவு.

அந்த நேரத்தில், நான் நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தேன். மீண்டும் நான் ஒரு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், அது உண்மையான உறவாக இருக்க வேண்டும் வாழ்க்கையில் அர்ப்பணிப்புடன் வாழ்வதில் இருவருக்கும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்க வேண்டும் என நடிகை மம்தா தெரிவித்துள்ளார்.

