தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சமீபத்தில் பேட்டியில், நடிகை திரிஷாவிடம் இருந்து விஜய் முதலில் வெளியே வர வேண்டும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் திரிஷாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரிஷா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அரசியலில் நான் நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறேன்.

உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக பொறுப்புடன் பேச வேண்டும், தனிப்பட்ட வாழ்க்கை பொது விவாதத்திற்கு உரியது இல்லை.

நான் திரைக்கலைஞர் என்பதை மட்டுமே அடையாளப்படுத்த விரும்புகிறேன், அவமரியாதையை ஒரு போதும் ஏற்க முடியாது. இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை, எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

