நடிகர் விஜய் மற்றும் திரிஷாக்கு இடையேயான நட்பு குறித்து பல்வேறு விதமான முனுமுனுப்புக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் கிசுகிசுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக பலரும் பலவிதமான விஷயங்களை வெளிப்படையாக பேசினாலும், விஜய் மற்றும் திரிஷா தரப்பிலிருந்து இதுகுறித்து நேரடியான மறுப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால், மறைமுகமாக பல பதிலடிகளை இருவருமே கொடுத்து தான் வருகிறார்கள். இப்படி இருக்கையில், பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் விஜய் முதலில் திரிஷாவிடம் இருந்து வெளியே வரவேண்டும் என்று மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

இது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரும் youtuber அந்தணன் ஓரிரு மாதங்களுக்கு முன்பு பல நேரங்களில் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையில் த்ரிஷாவால் தான் பிரச்சனை வந்துள்ளது என்பது போல் பேசி இருந்தார்.
தற்போது, விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதால் விஜய் அரசியலில் தூய்மையாக இருக்க வேண்டும். பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது தான். அப்படி இருக்கையில், விஜய் மட்டும் என்ன நாள்தோறும் பாலில் குளித்துவிட்டு பன்னீரை குடித்துவிட்டா வருகிறார்.

அவரும் உங்களைப்போல், ஒரு சராசரி மனிதர் தான். அவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும். என்று தெரிவித்திருந்தார். அந்தணனின் இந்த கருத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரும் அந்தணன் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையில் பழக்கம் இருப்பதை உறுதி செய்கிறாரா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆமாடா த்ரிஷா விஜய் தொடர்பு உண்மைதான்
— சிலுவை (@SiluvaM_) February 14, 2026
– வலைபேச்சு அந்தனன்
😂😂😂 pic.twitter.com/xYilHlcMWj
முன்னதாக, நாயினர் நாகேந்திரனின் கருத்துக்கு விஜயோ த்ரிஷாவோ இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

