4 பேருக்கு மறுவாழ்வு கொடுத்து ஒவ்வொருவர் மனதிலும் மனிதநேயத்தை விதைத்து சென்றுளார் 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்.
கேரளாவில் 10 மாத பெண் குழந்தை துயராமான சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தது. பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லம் போர்மா சந்திப்பில், எதிரே வந்த கார் அலின் ஷெரின் பெற்றோர்கள் பயணித்த வாகனத்தின் மீது மோதியதில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
குழந்தைக்கு உடனே சிகிச்சை அளிக்க அருகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் கொச்சிக்கு மாற்றப்பட்டனர். ஆனால் நேற்று குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து 10 மாத குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் மற்றும் தாய் ஷெரின் ஆன் ஜான், குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி உள்துறை ஆதரவுடன், கேரள உறுப்பு பகிர்வு வலையைமப்பு ஒருங்கிணைப்பின் கீழ், திருவனந்தபுரத்தில் உள்ள பல்வேறு மருத்துவ மையங்களுக்கு உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன.

அலின் ஷெரின் உறுப்புகளான கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வு, கார்னியாக்கள் தானமாக வழங்கப்பட்டன. 10 மாத குழந்தையின் கல்லீரல், 6 மாத குழந்தைக்காக வழங்கப்பட்டது.
மற்றொரு குழந்தைக்கு சிறுநீரங்களும், இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்டது.
இதையடுத்து சோகத்தில் இருந்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட அமைச்சர் வீணா ஜார்ஜ், உங்கள் குழந்தை பல உயிர்களை காப்பாற்றியதாக நெகிழ்ச்சியடைந்தார்.
இதன் மூலம் கேராளவின் இளைய உறுப்பு தானம் செய்தவராக 10 மாத குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் பெருமையை பெற்றுள்ளது குறிப்படத்தக்கது. நாளை குழந்தையின் இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடக்க உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

