மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு 3 மாதம் சேர்த்தி ரூ.3,000 மட்டும் கோடைக்கால சிறப்பு தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு!
சட்டமன்றத் தேர்தலைக் காட்டி அடுத்த சில மாதங்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை’ தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என, 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் இன்று காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில், #DravidianModel 2.0-இல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டு மகளிர் #வெல்லும்தமிழ்பெண்கள் -ஆக நடைபோட என்றும் துணை நிற்போம். #வெல்வோம்_ஒன்றாக! அன்பும், வாழ்த்தும்!! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்,.

