இப்பொழுதெல்லாம் திருமண நிகழ்வை கூட பிரபலங்கள் வியாபாரமாக மாற்றி வருகின்றனர். சமீபத்தில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கூட அப்படித்தான் நடந்தது.
ஆனால் அது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான போது வரவேற்பு பெறவில்லை என கூறப்பட்டது. பிரபலங்கள் யாரெல்லாம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது வெளி உலகுக்கு தெரியமல் போனது. சரி ஓடிடியில் வெளியிட்டால், யாரெல்லாம் பங்குபெற்றார்கள் என பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என நம்பிய நயன்தாராவுக்கு ஏமாற்றம்தான்.

ஆனால் நல்ல தொகைக்கு போனதால் நயன்தாரா இந்த விஷயத்தில் கவலைப்பட தேவையில்லை. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு தான் பாதிப்பு. இருப்பினும் நெட்பிளிக்ஸ் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அடுத்தடுத்து பிரபலங்களின் திருமண நிகழ்வின் உரிமத்தை பெற்று தனது ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் காதல் பற்றி ஊடகத்தில் சொன்னாலும், இதுவரை அறிவிக்காத நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா.

இருவரும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில உள்ள உதய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் பந்தத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதறக்க பெரிய தொகைக்கு ஒப்பந்தம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

