சென்னையில் (பிப்ரவரி 12) இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1560 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் எப்போதுமே பாமர மக்களின் கனவு. நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கை. ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கும் விலை வேகம் எடுத்து நகை பிரியர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
காலை ஒரு விலை மாலை ஒரு விலை என்ற ரேஞ்சுக்கு ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2026 இல் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி காணப்பட்டது. இந்த விலையானது நடப்பு ஆண்டு இறுதிக்குள் 1.5 லட்சம் ரூபாய் என்ற இலக்கை தொட்டு விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இது தற்காலிகமான சரிவாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மத்திய வங்கிகளின் தங்கம் சேமிப்பு மற்றும் டாலரின் மதிப்பு சரிவு என பல காரணங்களால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் இந்த விலை ஏற்றம் ஒரு தற்காலிகமான ஒன்றா அல்லது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த வாய்ப்பா என்பது பெரும் சந்தேகத்தை வர வைக்கிறது.
முன்னதாக நடப்பு வாரத்தில் தங்கத்தின் விலையை பார்க்கும் போது ஒரு இழுபறியான நிலையிலே காணப்பட்டு வருகிறது. கடந்த வாரம் எட்டி உச்சத்தில் இருந்தும் சரிந்த தங்கம் விலை ஆனது தற்போது ஏற்றம் காண போராடி வருகிறது என்றே சொல்லலாம்.

தற்போது, இன்று (பிப்ரவரி 12) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்து தங்கம் விலை சவரனுக்கு ரூ 1560 குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ 190 குறைந்து, ஒரு கிராம் சுமார் 14,600 க்கும், விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ 300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,00,000-க்கும் விற்பனையாகிறது.

