புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்டு தூதராக தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிப்பை தாண்டி மசாலா பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். முன்னதாக இவர் நடனமாடும் பாடல்களும் உடனடியாக ஃபயர் மோடில் ஹிட் ஆகி விடுகிறது.
இதற்காக, இவர் ரூபாய் ஒரு கோடி முதல் 6 கோடி வரை சம்பளமாக பெறுவதாக அவ்வப்போது விஷயங்களும் கசிந்து வருகின்றன. அதேபோல், சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடுவதற்கு தமன்னாவுக்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாம்.

தற்போது, புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்டு தூதராக தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ள நிலையில், தமன்னா இதற்காக 6.2 கோடி சம்பளம் பெறுவதாகவும், சினிமா சம்பளத்தை விட இது அதிக வருமானம் தரும் டீல் என்பதால் தமன்னாவுக்கு இந்த டீலிங் மிகவும் பிடித்து விட்டதாம்.

இந்தியா முழுவதும் பிரபலமாக பலராலும் பயன்படுத்தக்கூடிய சோப் என்ற பெருமை மைசூர் சாண்டிலுக்கு உண்டு. கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனம் தான் மைசூர் சாண்டல் சோப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 100 ஆண்டுகளுக்கு மேலான இந்த மைசூர் சாண்டல் சோப்புகள் அதன் தரத்திற்காகவும் வாசனைக்காகவும் பெயர் போனது என்பது பலரும் அறிந்த விஷயமே.

