பல நடிகைகள் சினிமாவில் வாய்ப்பில்லாமல் அக்கா, அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகின்றனர்.
அப்படி அம்மா ரோலில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய ரவுண்டு வந்தார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் இவர் கதாபாத்திரம் பேசப்பட்டது.
இவருக்கு திருமணமாக சுப்ரிதா என்ற மகள் உள்ளார். இதனிடையே 2019ல் சுரேகாவின் கணவர் இறந்து போனதால், தனிமையில் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தொடர்ந்து சினிமாவில் நடிக்க எண்ணினாலும் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அதிகமாக சுரேகா வாணி ட்ரோல் செய்யப்பட்டார். இன்ஸ்டாவில் போட்ட புகைப்படங்களை பார்த்து குடும்பத்தினர் பல விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில் சுரேகாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது மகள் சுப்ரிதா முடிவு செய்துள்ளார். சுரேகா வேண்டாம் என கூறினாலும், சுப்ரிதா இந்த முடிவை திட்டவட்டமாக எடுத்துள்ளார்.

ஒன்றரை வருடமாக அம்மா மேக்கப் போடவில்லை, அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதது வேதனையாக உள்ளது. மறுமணம் செய்ய அவர் மறுத்தாலும், என் திருமணத்திற்கு முன் அவருடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என சுப்ரிதா கூறியுள்ளார்.
சுப்ரிதா தற்போது நாயகியாக ‘அமராவதிக்கி ஆஹ்வானம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளும், ஆதரவாக இருக்கும் ஒருவரை தேடி வருவதாக கூறினார்.

