அன்றாடம் நம்மை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்வது தூய்மை பணியாளர்கள் மட்டும்தான். குப்பை என்று பாராமல், நேசத்தோடு பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பெரியதாக யாரும் கண்டுகொள்வதே இல்லை.
ஆனால் இன்று தூய்மை பணியாளர்கள் என்றால் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது அவர்களின் பதவிக்கு… காரணம் ஒரே ஒரு பெண் தான். அவர் தான் பத்மா.
சென்னையில் குப்பையை அள்ளும் போது கிடைத்த 45 சவரன் நகையை உரியவரிடம் நேர்மையாக ஒப்பைடத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மனிநேயத்தை மீண்டும் நினைவுப்படுத்திய இந்த நிகழ்வு வைரலானதை தொடர்ந்து பத்மாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் தாண்ட பிரபலங்கள் நேரில் அழைத்து பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.
பத்மா போட்ட விதை தான்.. தற்போது மரமாக எழ துளிர்விட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் பலர் குப்பைகளை அள்ளும் போது கிடந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்பைடத்து பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

பத்மா ஆரம்பித்து வைத்த இந்த மனித நேய சம்பவம், நீண்டு கொண்டே போகிறது. நேற்றைய முன்தினம் ஆட்டோவில் தவறி விழுந்த 20 சவரன் நகை மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் தூய்மை பணியாளர் துரை.
மதுரையில் 25 சரவன் நகையை குப்பையில் இருந்து எடுத்து விவசாயியிடம் ஒப்படைத்துள்ளர் மதுரை மாநகராட்சி பணியாளர்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்க காரணம் பத்மா போட்ட மனிதநேய விதைதான்…. இன்னும் தொடரட்டும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்…

