திண்டுக்கல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுக சார்பில் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.
பின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக எங்களது கூட்டணியில் உள்ள பாஜக அதிகரித்ததை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைக் கண்டித்து 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திமுக கூட்டணி பலமாக உள்ளது என கூறிய நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி டெல்லி தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த கேள்விக்கு , இதற்கு என்ன பதில் சொல்வது, தலையெழுத்து படி நடக்கட்டும், திமுக கூட்டணி பலம் இல்லாமல் உள்ளது. தோல்வி அடைவது நிச்சயம்.

கூட்டணிக்கை தொகுதிகள் ஒதுக்குவது பற்றி தலைமை அறிவிக்கும் போது தான் தெரியும். அனைத்தும் ரகசியம் தான் வெளியே சொல்ல முடியாது. ஸ்டாலின் உடன் இருப்பவர் இதை பற்றி கூறுவாரா? அனைத்தும் முடிவான பின்பே தெரியும்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உட்பட ஊராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் என அனைத்து அலுவலரும் போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு, திமுகவின் மோசமான ஆட்சிக்கு போராட்டங்களே அடையாளம்.
ஜாக்டோ ஜியோ பாராட்டு கூட்டங்கள் எல்லாம் நடைபெற்றது ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்தும் ஏமாற்று வேலை, அனைத்தும் பொய் அதற்குரிய விளக்கங்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சி வந்த உடன் அவர்களுக்கு தேவையான நன்மைகள் செய்வோம்.
போராட்டங்களால் மாணவர்கள் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. துப்புரவு பணியாளர்களை கைது செய்தனர் பின் காலை உணவு வழங்கி வருகின்றனர்.

நான்கு வருடம் பத்து மாதத்திற்கு பின்பு அனைத்தும் மந்திரியும் செயல்படுகின்றனர். அனைத்தையும் சரி செய்தது போன்று ஏமாற்று வேலையை திமுக செய்து வருகிறது.
உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திமுகவின் திட்டம் குறித்த கேள்விக்கு, இந்த ஆட்சி போக வேண்டும், ஒழிய வேண்டும், அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதை கனவாக கொண்டுள்ளனர்.

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு, நிச்சயம் செய்து உள்ளோம், இனி தாலி கட்ட வேண்டும், குடும்பம் நடத்த வேண்டும், பத்து மாதங்கள் பின்பே குழந்தை பிறக்கும் இப்பவே பெயர் வைக்க சொன்னால் எப்படி முடியும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

