மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை விசித்ரா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் நடன கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் விசித்ரா. பின்னர், ஒரு சில பாடங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து, நடித்து வந்த அவர் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சீசன் 7 நிகழ்ச்சியில் இவர்தான் வயதில் அதிகமான போட்டியாளர். இதன் பின்னர், விசித்ராவை அறியாதவர்களும் அறிந்து கொண்டனர். இப்படி இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் பிக் பாஸ் மூலம் கிடைத்தது. இந்த நிலையில், விசித்ரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதில் ‘வலி நம் வாழ்வை சற்றே நிறுத்தி வைக்கலாம். ஆனால் மனித மனதின் வலிமையை அது நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு தழும்பும் ஒரு போராட்டத்தின் வெற்றி கதையை சொல்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.
முன்னதாக, இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், விசித்ராவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவலையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

