50 வருடங்கள் கடந்தும் தந்தையின் செயலால் ஒருமுறை கூட அவரைப் பார்க்கவில்லை என நடிகை தபு தெரிவித்துள்ளார்.
தமிழில் 1996 இல் அப்பாஸ் மற்றும் வினித் நடித்த ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நடிகை தபு அறிமுகமானார். அதன் பின் மணிரத்தினத்தின் ‘இருவர்‘ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார்.
மேலும், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்‘ படத்திலும் தபுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. தற்போது, தபுவுக்கு 54 வயதாக ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் தபு தனது தந்தையின் பெயரை எங்கேயும் உச்சரித்ததும் இல்லை, பயன்படுத்தியதும் இல்லை.
அதே வேளையில், தனது வெற்றிக்கு முழுமுதற்காரணம் தனது தாய் தான் என்றும் அவர் பலமுறை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர் ஆன தபுவின் தாய் அவரையும் அவரது அக்காவையும் வளர்த்திருக்கிறார்.
இந்நிலையில், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தபு தற்போது பூத் பங்களா, Slum Dog ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 54 வயதாகியும் பிசியான நடிகையாக இருக்கும் தபு தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தனது திருமணம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தபு தனது வாழ்க்கையில் நடந்த சாக்கிங் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் எனது பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்டனர். அப்போது, எனக்கு வயது 3 எனது தந்தையுடன் எனக்கு எந்த தொடர்பும் இருந்தது இல்லை. நான் அவரை சந்திக்க விரும்பியதும் இல்லை. என் சகோதரி மட்டும் அவரை அடிக்கடி சென்று பார்த்து வருவார். என் தந்தையின் பெயரை எனது பெயருக்கு பின்னால் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என நினைத்தேன். நான் தற்போதைய இந்த வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில் ஆகி மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் தந்தையை ஒருக்காலும் நான் பார்க்க விரும்ப மாட்டேன். மேலும், முன்னதாக தபுவின் தந்தை பிரபல நடிகையான ஷபானா ஹாஸ்மின் சகோதரன் தான் தபுவின் தந்தை ஜமால் ஹிஸ்மி என்பது குறிப்பிடத்தக்கது.

