தமிழ் சினிமாவில் மிரட்டும் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். 90களில் ஸ்டண்ட் மேனாக பணியாற்றியவர்.
தற்போது அவரின் நிலைமை பரிதாபம்தான். வீல் சேரில்தான் அவர் உலா வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில வீல் சேரில் அமர்ந்தபடியே அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ டிரெண்டானது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் அரசியல் குறித்து பேசினார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மாற்றம் வர வேண்டும் என நினைக்காலம், அது விஜய்யாக இருந்தாலும் சரி.

மேலும் மற்ற நடிகர்கள் எனக்கு உதவியது போல, விஜய் எனக்கு உதவி செய்யவில்லை. அதற்காக அவரை நான் கெட்டவன் என சொல்லவில்லை என பொன்னம்பலம் கூறினார்.

