சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் தேமுதிகவின் மேற்கு சென்னை மாவட்ட கழகம் சார்பில் பாகம் முகவர்கள் மற்றும் பூத் முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் சதீஷ் தலைமை கழக செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேடையில் ஒவ்வொரு நிர்வாகியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விருகம்பாக்கம் தேர்தல் பொறுப்பாளர் தா மாரி பேச தொடங்கினார்.
“எனக்கு கோபம் கோபமாக வருகிறது. நான் கட்சிக்காக மூன்று முறை சிறை சென்று உள்ளேன். அதில் பத்திரிக்கையாளர்களை அடித்து விட்டு சிறை சென்று இருக்கிறேன். நான் மறுபடியும் சொல்கிறேன் எனக்கு கோபம் வருகிறது. பத்திரிக்கையாளர்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.. வீடு புகுந்து உங்களை அடிக்க வேண்டியது வரும் கண்டிப்பாக அது நடக்கும்” எனக் கூறிவிட்டு வணக்கத்துடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

