புதுப்படங்கள் ரிலீசாவதற்கு இணையாக ரீரிலீஸ் படங்களுக்கும் மவுசு அதிகம்தான். இப்போதைய சினிமா வரலாற்றில் எல்லா படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.
ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுப்பதால், கில்லி, மங்காத்தா, படையப்பா, சச்சின் போன்ற படங்கள் மீண்டும் திரையில் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது.

அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களை குதூகலிக்கும் விதமாக முத்தான மூன்று படங்கள் மீண்டும் திரைக்கு வர உள்ளது.

அதில் மௌனம் பேசியதே மற்றும் மின்னலே படம் ரீரிலீஸ் ஆவது தெரிந்த விஷயம் என்றாலும், 3வதாக காதலர் தினம் படத்தை ரீரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த வருட காதலர் தினம் கொண்டாட்டம் களைகட்டும் என நம்பலாம்.

