டிஎன்பிஎஸ்சி சார்பில் நேற்று நடக்கவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் வரும் மார்ச் 15ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 28க்குள் இணையத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 2க்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாளையம் அறிவித்துள்ளது.

