தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் கீதா கோவிந்தம் திரைப்படம் தான் அவருக்கு திருப்பத்தை தந்தது.
அந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ராஷ்மிகா.கர்நாடகாவை சேர்ந்த இவர், கன்னட படங்களை விட தெலுங்கு படங்களில் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது முதல் விஜய் ராஷ்மிகா இடையே காதல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது.
ஆனால் இருவரும் இதை மறுக்கவில்லை. தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில், ராஷ்மிகாவோ பான் இந்திய சினிமா ஸ்டாராக உயர்ந்தார். தமிழ், ஹிந்தி என இந்திய சினிமாவில் பேசப்பட்டார்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய போவதாக தகவல் பரவியது. உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது வதந்தி என்பது உறுதியானது.
இது குறித்து ஹிந்தி ஊடங்களில் பேசியுள்ள ராஷ்மிகா, திருமணம் பற்றி வரும் செய்தி உண்மையில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். பிப்ரவரி 26ல் திருமணம் என்ற தகவல் குறித்து கேட்ட போதும், பொறுத்திருந்து பார்க்கலாம் என கூறியுள்ளார்.

