இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய மண் வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து 80களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார்.
மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து 80களில் பான் இந்திய ஸ்டாராக உயர்ந்தார். தொடர்ந்து ரேவதி நடிக்க மட்டும் செய்யாமல், தயாரிப்பு, இயக்குனர் என பன்முக திறைமைகளை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக மிடிர், பாய் பிரெண்ட் ஆகிய ஆங்கில படங்களை இயக்கினார். படம் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் சிறந்த ஆங்கில படத்துக்கான விருதையும் பெற்றார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் 11ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது பேருந்தில் பயணம் செய்தேன்.அப்போது ஒரு நபர் என்னிடம் தவறாக நடந்தான். உடனே அந்த இடத்தில வைத்தே அவனை பளார் என்று அறைந்துவிட்டேன்.

பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது என் தாய் தான். தவறாக யாராவது நடந்தால் உடனே அடித்து விட வேண்டும் என கூறினார்.
அது போல பெற்றோர்கள் தங்கள் குழைந்தைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ரேவதி கூறினார். இவரின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் அமோக ஆதரவு பெருகி வருகிறது.

