கடந்த வாரம் மகாராஷடிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்து சிதறியதால் அவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பங்கஜா முண்டே இன்று காலை லத்தூர் செல்ல புறப்பட்டார். லத்தூரில் மாவட்ட கவுன்சில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

இதனிடையே திடீரென்று அவர் பயணம் செய்ய வேண்டிய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனே விமானி இந்த தகவலை அமைச்சரிடம் கூற, அவர் தனது பயணத்தை ஒத்திவைத்தார்.

