ஜனநாயகன் படத்தை வெளியீடு செய்வதில் மீண்டும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த பொங்கலுக்கு விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சென்சார் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.
தணிக்கை சான்று வாங்க கோரி தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் முறையிட, வழக்கை விசாரித்த தனி நீதிபதி உடடினயாக தணிக்கை சான்று வழங்க உத்தவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்ய, தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா மற்றம் நீதிபதி அருள் முருகன் அமர்வு விசாரித்து, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தார்.

மேலும் தணிக்கை வாரியத்துக்கு உரிய அவகாசம் அளிக்கவில்லை, படத்தில் சில காட்சிகள் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சென்சார் போர்டு தலைவர் படத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
மீண்டும் வழக்கை தனி நீதிபதி ஆஷாவே விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்சார் போர்டுக்கு உரிய அவகாசம் வாங்கி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

