இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்திய எரிசக்தி வார விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாகவும், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என கூறியுள்ளார்.

அதாவது, இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களின் வரி விகிதம் கணிசமாக குறையும் என்பதால் விலையும் கணிசமாக குறைய உள்ளது.
முக்கியமாக பல சொகுசு கார்கள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யும் போது 110% வரை வரி விதிக்கப்படும்.
இதனால் காரின் விலை இரண்டு மடங்காகிறது. உதாரணத்திற்கு ஒரு கார், ஒரு கோடி ரூபாய் என்றால் விலை ரூ2 கோடி ஆகும்.
இந்தநிலையில் வரி குறைப்பதன் மூலம் 110%ல் இருந்து 40% ஆக உள்ளதால் ரூ.1 கோடி மதிப்பிலான கார் ரூ.1.4 கோடிக்கு வாங்கலாம்.

இது மட்டுமல்லாமல், தொழிற்துறை பொருட்களுக்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட உள்ளதால், இயந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் வரியும் நீக்கப்பட உள்ளது.
€6.4 பில்லியன் மதிப்புள்ள விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு முன்பு 11 சதவீதம் வரை விதிக்கப்பட்டிருந்த வரி தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், €3.4 பில்லியன் மதிப்புள்ள ஆப்டிகல், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கு முன்பு 27.5 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டிருந்த வரியும் தற்போது கிட்டத்தட்ட பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒயின் மீது விதிக்கப்ப்டட வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது. 150% வரை இருந்த வரிகளில், உயர்தரமான ஒயின்களுக்கு 20% ஆகவும், நடுத்த தர ஒயின்களுக்கு 30% வரி குறைக்கப்பட்டுள்ளது. 150% இருந்த ஸ்பிரிட்ஸ் வரிகள் 40% ஆகவும், 110% இருந்த பீர்களுக்கான வரி 50%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

