77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் அனுபவம் முக்கியம், அந்த அனுபவம் இல்லாத ஒருவருடன் கூட்டணி போட யாரும் விரும்பமாட்டார்கள்.
விஜய் பூஜ்ஜியம் மாதிரி.. பூஜ்ஜியத்துடன் எண் சேர்ந்தால் தான் மதிப்பு… அது போல அனுபவம் இருந்தால்தான் அரசியலில் ஒரு நபருக்கு மதிப்பு உயரும். எம்ஜிஆர் சினிமாவிலும், அரசியலிலும் தொடர்ந்து பயணித்தவர்.
ஒரே நேரத்தில் இரண்டிலும் வெற்றி கண்டவர். சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவது கஷ்டம். நடிகர் விஜய், தனது ரசிகர்களையும், தொண்டர்களையும் ஏமாற்றும் வகையில் அவசர முடிவுக எடுக்கக்கூடாது

அதுபோல அவர் என்டிஏ கூட்டணிக்கு வந்தால், தொடர்ந்து நிம்மதியாக அரசியலை தொடரலாம், மாறாக திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அனுபவம் இல்லாததால் அதிமுக என்டிஏ கூட்டணியிடம் சரணடைந்ததாக விஜய் பேசுகிறார். தேர்தலில் போட்டி திமுக மற்றும் என்டிஏ கூட்டணியிடையே மட்டும்தான். வெற்றி பெறும் கட்சிக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் என விஜய்க்கு தமிழிசை மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

