சிறையில் இருந்து வெளியே வந்த கணவனை காத்திருந்து காரில் அழைத்து சென்று மனைவி செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தெலங்கானாவில் பெத்தரவிடு பகுதியை சேர்ந்த லாலு சீனு என்பவர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். லாலு சீனு லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
மேலும் போதை பழக்கத்துக்கு அடையான அவர், கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே லாலு சீனு மனைவி ஜான்சி, தனது தம்பியின் நண்பருடன் கள்ளக்காதலில் விழுந்தார்.
இந்த கள்ளக்காதல் சம்பவம் சிறையில் இருந்த கணவருக்கு தெரியவர, சிறைக்கு கணவனை பார்க்க சென்ற ஜான்சி மற்றும் அவரது தம்பியை வெளியே வந்தவுடன் உங்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த ஜான்சி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்த சதி திட்டம் தீட்டினார். குண்டூரை சேர்ந்த கூலிப்படையினரிடம் ரூ.2 லட்சத்துக்கு பேரம் பேசி முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் சிறையில் இருந்து வெளியேறிய கணவரை அழைக்க காரில் மனைவி ஜான்சி மற்றும் அவரது தம்பி காத்திருந்தனர்.
இதையடுத்து அவரை அழைத்து செல்லும் போது, கூலிப்படையினர் மற்றொரு காரில் பின்தொடர்ந்தனர். இரு முறை முயற்சி தோல்வியடைந்த நிலையில், லாலு சீனு சிறுநீர் கழிக்க காரை நிறுத்த சொன்னார். அப்போது காரை நிறுத்த அவர் இறங்கி சென்ற போது, அவரது கண்ணில் மிளகாய் பொடியை ஜான்சி மற்றும் அவரமு தம்பி தூவினர்.
இதை பயன்படுத்திய கூலிப்படையினர் அவரை காரில் தூக்கி போட்டனர். அப்போது கத்தியை எடுத்த ஜான்சி கணவரின் வயிற்றில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
கள்ளக்காதலன் கூறியபடி கொலை செய்த பின், போலீசில் சரணடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

