இயக்குநர் மோகன் ஜி உருவாக்கிய திரௌபதி படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. கலவையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்தன.
இருப்பினும் அதே கூட்டணியை வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் மோகன் ஜி. பொங்கலன்று வெளியாக வேண்டிய படம், திரையரங்குகள் கிடைக்காததால் தள்ளிப்போனது.
குறிப்பாக விஜய்யின் தெறி படம் நேற்று மறுவெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவை சந்தித்து ரீ ரிலீசை தள்ளி வைக்க வேண்டும் என திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து கலைப்புலி தாணுவும் ஒத்துக்கொண்டு, தெறி மறு வெளியீட்டை ஒத்திவைத்தார். ஆனால் நேற்று திரௌபதி 2 படத்துடன் மங்காத்தா மறு வெளியீடு செய்யப்பட்டது. இதனால் திரௌபதி 2 வசூல் பாதிக்கப்பட்டது.
இது குறித்து இயக்குநர் மோகன் ஜி, #திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை..
#திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு…
— Mohan G Kshatriyan (@mohandreamer) January 24, 2026
இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G என குமுறியுள்ளார்.

