இந்தியாவுக்கு வருகை புரிந்து விளையாடி வந்த நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது.
3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. இதன் பிறகு ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தொடரை வென்றது நியூசிலாந்து அணி.
ஆனால் இந்திய அணி சார்பாக விராட் கோலி தனியாக போராடி சதமடித்து விளாசினார். இருந்து அது வீணாகிப் போனது. இந்த நிலையில் இளம் வீரர்கள் விராட் கோலியின் மனநிலையை பின்பற்ற வேண்டும் என இந்திய அணி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஒரு நாள் கிரிக்கெட்டின் GOAT விராட் கோலி. 52 சதங்களை அடித்து சச்சின் சாதனையை முறியடித்தது அவரை ஒரு தனி உயரத்தில் வைத்துள்ளது, அவர் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான் வெற்றியின் ரகசியம்.

சில வீரர்கள் எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார், ஆனால் கோலி ரன் குவிப்பதிலையே கவனம் செலுத்துவார். கோலியின் மன உறுதி, தைரியம், ஆட்டத்தை முன்னெடுத்து செல்லும் விதத்தை இளம் வீரர்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

