இபிஎஸ் இணைந்ததால் தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார் டிடிவி தினகரன். தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, இன்று மீண்டும் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளார். அவரை மீண்டும் இணைய வைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் அண்ணாமலை.
இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு நன்றி கூறியுள்ளார் அண்ணாமலை. அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

