பொதுவாக ஒரு திரைப்படம் மனதுக்கு பிடித்துவிட்டால் கொண்டாடுவது இயல்பு தான் என்றாலும், தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழை தாண்டி மற்ற மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
எத்தனையோ தமிழ் படங்களை கொண்டாடிய நம் தமிழ் சினிமா ரசகிர்கள், மலையாள படங்களை அண்மை காலமாக கொண்டாடி வருவது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆம், திஞ்சித் அய்யத்தன் இயக்கத்தில், பயானா மாமின், சுரப் சச்தேவா, நரேன், வினித், சந்தீப் பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் eko.
படம் ஆரம்பம் முதல் மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் இறுதி வரை கொண்டு சேர்த்த இயக்குநரின் திறமைக்கு சபாஷ் சொல்லலாம்.

மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கும் மலாத்தி என்ற மலேசிய பெண், அவரது கணவன் குரியச்சன் வசிக்கின்றனர்.
மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் கணவர். அவர் பெண் பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என குறைகூறும் மக்கள்,
தனியாக வசிக்கும் மலாத்திக்கு துணையாக பியூஸ் என்ற இளைஞரை பணியமர்த்தி வைக்கிறார் குரியச்சன். அந்த காட்டுக்குள் ஒரு நாயுடன் வரும் மோகன் போத்தன், மலாத்தியையும், அவரது கணவர் குறித்து விசாரிக்கிறார்,

கூடாரம் அமைத்து தங்கிய வினித் ஒரு சில நாட்களில் மர்மமான முறையில் இருக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்கள்தான் eko படத்தின் திரைக்கதை.
அரிதான நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் குரியச்சன், மலேசிய பெண்ணான மலாத்தியை அங்கிருந்து வரவழைத்த பிளாஷ்பேக் வேற ரகம்.
குரியச்சனை தேடும் போலீஸ், அடர்ந்த மலை காட்டுக்குள் குகைக்குள் ஒளிந்திருக்கும் குரியச்சனை யார் தேடியும் கிடைக்காத விநோதம். கிளைமேக்சில் மலாத்தியின் நடிப்பும், நாய்களின் சத்தமும், குரியச்சனின் மனித நாயான பியூஷ்க்கும் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் தான்.
மக்கள் மனதில் ஆழமாக பதிந்த இந்த eko படம் நெட்பிளிக்சில் ரிலீசானது முதல் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள். ஒரு சிலர் படத்தை விட்டு விட்டு பார்த்தால் கிளைமேக்ஸ் புரியாமல் வலைதளம் மூலம் விடை தேடி வருகின்றனர்.
அழகான ஒளிப்பதிவும், அருமையான திரைக்கதையும் படத்துக்கு கூடுதல் பலம். குரங்குகளை வைத்து கிஷ்கிந்தா காண்டம் உருவாக்கிய திஞ்சித் அய்யத்தன் இந்த படத்தில் நாய்களை வைத்து வேட்டையாடியுள்ளார் என்றே சொல்லலாம்.

